ஈராக் நாட்டின் அரசியல் - வரலாற்று பார்வை..! ( பகுதி 1 )

ஈராக் நாட்டின் அரசியல் - வரலாற்று பார்வை..! ( பகுதி 1 )


 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஜெர்மானிய தேசிய அரசுக்கும், ஒஸ்மானியர்களுக்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்தது. அதன் நிமித்தம் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் பாதை நிர்மாணிக்கும் திட்டம் வந்தது. அதே காலத்தில் தான், ஜெர்மானிய பெட்ரோலிய நிபுணர்கள் ஈராக்கில் செய்த ஆராய்ச்சியின் பயனாக நிலத்தடி எண்ணெய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்தக் கண்டுபிடிப்பானது. 


பிற்கால ஈராக்கின் அரசியல் - பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தியது. ஆயினும் எதிர்பாராத விதமாக, முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியுற்றது. போரில் ஜெர்மனியை ஆதரித்ததால் துருக்கியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஒஸ்மானிய சாம்ராஜ்ஜியம் பலவீனமடைந்தது, அந்நியரின் ஊடுருவலுக்கு வழிவகுத்தது. போரில் வெற்றி வாகை சூடிய பிரிட்டனும், பிரான்சும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. ஒஸ்மானிய ஆதிக்கத்தில் இருந்த அரபு பிரதேசங்கள் யாவும், ஒன்றில் ஆங்கிலேயரினால் அல்லது பிரெஞ்சுக்காரரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அப்படித்தான் ஈராக் ஆங்கிலேயர் காலனியாகியது. 


துருக்கியர் காலத்தில் ஈராக் ஒரே தேசமாக கருதப்படவில்லை. அப்போது அங்கே மூன்று மாகாணங்கள் இருந்தன. (தேசம் என்ற சொல் ஒஸ்மானிய சாம்ராஜ்யத்தை குறிக்கும்.) ஈராக்கின் தென்பகுதி, குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப்படலாயிற்று. மத்திய ராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வடஈராக் மொசுல் மாகாணம் ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். 


அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய் விட்டார்கள். குர்தியரின் தனிநாட்டுக் கோரிக்கைக் குப்பைக் கூடைக்குள் போனது. 


1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு, புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார - கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும் , லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும்தான் . ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 - இல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ , பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப்படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள். 


எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத் குவைத்துடன் சேர்த்து, பஸ்ரா மாகாணம் என்று அழைக்கப்படலாயிற்று. மத்தியராக், பாக்தாத் மாகாணம். குர்திய மக்கள் வாழும் வடஈராக் மொசுல் மாகாணம் ஆங்கிலேயர்கள் அந்த மூன்று மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஈராக் என்று பெயரிட்டனர். அப்போதே குர்திய இனத்தவர்கள் தமக்கென தனி நாடு வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். (குர்து வீரர்கள் ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்டனர்) குர்திஸ்தான் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆங்கிலேயர்கள் உறுதிமொழி அளித்தனர். ஆனால் இறுதியாக பாக்தாத்தில் ஒரு அரசை நிறுவி, அவர்கள் கையில் முழு ஈராக்கையும் ஒப்படைத்து விட்டு போய்விட்டார்கள். குர்தியரின் தனிநாட்டுக் கோரிக்கைக் குப் பைக் கூடைக்குள் போனது. 1960 வரையில் குவைத் தனியாக பிரிட்டிஷ் பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. குவைத்தில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, குவைத் என்ற மாநிலத்தில் மட்டும் காணப்பட்ட அளவுக்கு மிஞ்சிய எண்ணெய் வளம். இரண்டு , புதிய ஈராக் அரசும், துருக்கியும், பாரசீக வளைகுடாப் பகுதியை பாவிக்க விடாமல் தடுப்பது. வளைகுடாவின் பொருளாதார - கேந்திர முக்கியத்துவம் காரணமாக தான் தொன்னூறுகளில் குவைத் மீட்பு யுத்தம் நடந்தது. துருக்கிய மேலாதிக்கத்திற்கு எதிராக போராடிய அரபு விடுதலைப் போராளிகளின் தலைவர் பைசல், டமாஸ்கஸ் (சிரியா) தலைநகராகக் கொண்ட அகண்ட அரபு தேசம் அமைக்க விரும்பினார். ஆனால் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் இடையிலான இரகசிய ஒப்பந்தம் காரணமாக அந்தக் கனவு பலிக்கவில்லை. சிரியாவும், லெபனானும் பிரான்சுக்கு தாரை வார்க்கப்பட்டது. பைசலுக்கு கிடைத்தது ஈராக் மட்டும்தான். ஆங்கிலேயர்கள் பைசலை ஈராக் மன்னனாக முடி சூட்டி விட்டு 1932 - இல் சுதந்திரம் வழங்கினார்கள். இதிலே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. ஜனநாயகப் பாதுகாவலர்களான பிரிட்டிஷார் ஈராக்கில் தேர்தலையோ , பல கட்சி ஜனநாயகத்தையோ அறிமுகப்படுத்தவில்லை. தேசங்களின் எல்லை பிரிக்கும் பொழுது உள்ளூர் மக்களின் விருப்பத்தை கேட்காமல், ஐரோப்பிய எசமானர்களே தீர்மானித்தார்கள். எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைவரான பைசல் சுதந்திரத்தின் பின்னர் ஓராண்டு மட்டுமே உயிரோடு இருந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் முடிசூட்டிக் கொண்ட இளவரசர் காசியின் காலத்தில் பல பிரச்சினைகள் தோன்றின. ஈராக் இராணுவம் அரசியலில் தலையிட ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போர் காலத்தில் இராணுவ அதிகாரிகள் பிரிட்டனுடனான உறவை துண்டித்து விட்டு, ஜெர்மனியுடன் உறவை ஏற்படுத்தினார்கள். ஏதோ அவர்கள் விருப்பம் என்று பிரிட்டன் விட்டுக் கொடுக்கவில்லை. ஈராக் மீது படையெடுத்தார்கள். பாக்தாத் கடற்கரையில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், ஒரு மாதத்திற்குள்ளேயே பாக்தாத்தை கைப்பற்றி விட்டன. (2003 - ஆம் ஆண்டு சரித்திரம் திரும்பியது. பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஈராக்கை ஆக்கிரமித்தன). பாக்தாத்தில் பிரிட்டிஷ் சார்பு பொம்மை அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டது. புதிய உடன்படிக்கை ஒன்று போடப்பட்டது. அதன்படி ஈராக் பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டி யேற்பட்டது. 


பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் பின்னர் ஈராக்கில் பல சமூக - பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்துறை துரித கதியில் வளர்ந்தது. நிலங்கள் தொடர்பான புதிய சட்டம் ஒன்று நிலவுடைமையாளருக்கு சாதகமாக அமைந்தது. சிறிய விவசாயிகளின் நிலங்களை சுவீகரித்துக் கொண்டனர். இதனால் நிலமற்ற விவசாயிகளின் குடும்பங்கள் தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நகரங்கள் பெருகின. கல்வி கற்ற மத்தியத் தர வர்க்கம் ஒன்று உருவானது. இந்த வர்க்கம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பொழுது, தமது நாடு நிலப்பிரபுக்களால் ஆளப்படுவதை புரிந்து கொண்டனர். அவர்களது மனக்குமுறலை பிரதிபலிக்கும் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது. மத்தியத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லாது, நகர்ப்புற தொழிலாளர்களும் ஆதரவளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க விடுதலை குறித்து பேசியதால், பெருமளவு ஷியா முசுலீம்களும், குர்து இன மக்களும் கவரப்பட்டனர். இதற்கிடையே அரச குடும்பம் அரசியல் செல்வாக்கு இழந்திருந்தாலும், அவர்களது உல்லாச வாழ்வு பறிபோகவில்லை. ஈராக் அரசு நிலவுடைமையாளர்களினதும், பிரிட்டிஷாரினதும் நலன்களை மட்டுமே கவனித்து வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்தன. இராணுவத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவியது. 


எகிப்தில் நாசர் தொடங்கி வைத்த அரபு தேசிய அலை ஈராக் கரையை அடைந்தது. 14 ஜூலை 1958 - ம் ஆண்டு, பிரிகேடியர் காசிம் தலைமையில்  "சுதந்திர அதிகாரிகள்" ஆட்சியை கைப்பற்றினார்கள். மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அரச குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். ஈராக் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் 1958 - ஆம் ஆண்டு இடம் பெற்ற ஈராக் புரட்சிதான் ஜனநாயகத் திற்கான முதற்படியாகும். அதுவரை காலமும் ஜனநாயகத்தின் காவல் தெய்வங்களான பிரிட்டிஷ்காரர்கள், ஈராக்கில் பிற்போக்கு மன்னராட் சியை ஆதரித்து வந்தார்கள். அவர்கள் எப்போதும் தமது நலன்களைப் பேணும் அரசாங்கத்தை அமைக்கவே விரும்பினார்கள். 1958 ஈராக் புரட்சி ஈராக் மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அவை மேற்கத்திய நலன்களுக்கு பாதகமாக இருந்தன. 


ஈராக்கில் எண்ணெய் அகழும் தொழிலில் பிரிட்டிஷ், பிரெஞ்சு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. கொள்ளை லாபமீட்டிய இந்த நிறுவனங்கள் ஒரு சிறு தொகையை மட்டும் ராயல்ட்டியாக ஈராக் அரசுக்கு வழங்கி வந்தன. அது கூட மக்களுக்கு போய்ச்சேருவதில்லை . ஈராக் அரச குடும்பமும், அதிகாரிகளும் எண்ணெய் விற்ற ராயல்ட்டி பணத்தில் உல்லாசமாக வாழ்ந்தார்கள். புரட்சிக்குப் பின்னர் வந்த அரசாங்கம் ராயல்ட்டி தொகையை அதிகரித்தது. எண்ணெய் நிறுவனங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. உடன்பாட்டுக்கு வரமுடியாமல் போனதால், எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறின. இதனால் ஈராக் அரசு எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியது. தகுதியற்ற உள்நாட்டு முகாமைத்துவம் காரணமாக பல பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டன. பல வருடங்களுக்குப் பின்னர், 1968 - ம் ஆண்டு, சோவியத் யூனியன் நிபுணர்களின் வருகைக்கு பின்னரே பெட்ரோலிய உற்பத்தி அதிகரித்தது. அதன் பிறகுதான் ஈராக் உலகில் இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டது. 


1958 புரட்சி ஈராக் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. பெறும் நிலவுடைமையாளர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. (சதாம் ஹுசைன் காலத்திற்குப் பின்னர்தான் விவசாயத் துறையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தலையெடுத்தன). பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. பெண்களுக்கு சம உரிமை கிடைத்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. ஈராக்கில் மொத்த பணியாட்களில் இருபது வீத மானோர் பெண்கள். இத்தகைய சமூக நலன் சார்ந்த பொருளாதார திட்டங்கள் சதாம் ஹுசைன் பதவியில் இருந்து அகற்றப்படும் வரை அமலில் இருந்தன. இடையில் எத்தனையோ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்திருக்கலாம். ஆனால் சமுதாய முன்னேற்றம் தடைப்படவில்லை. சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வரும் வரையில் ஈராக் பத்துக்கும் குறையாத ஆட்சிக் கவிழ்ப்புகளை கண்டுவிட்டது. 1958 புரட்சியின் பின் அரசமைத்த பிரிகேடியர் காசிமுக்கு பல எதிர்ப்புகள் வந்தன. பொதுவுடைமைவாதிகள், தாராளவாதிகள், தேசியவாதிகள் என்று பல பிரிவுகள் தமக்குள் சண்டையிட்டன. 1959 - ஆம் ஆண்டு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் தேசியவாதிகள் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வட ஈராக்கில் இனக்கலவரம் தோன்றியது. அதனை சாக்காக வைத்து கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். காசிமின் அரசு ஒடுக்குமுறை இயந்திரமாகியது. இதே வேளை நாட்டில் இன்னொரு புதிய அரசியல் சக்தி தோன்றியது. "பாத்” (Balth - மீள் உயிர்ப்பு) எனப் பெயர் கொண்ட அரசியல் இயக்கம் ஆரம் பத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது. பாரிசில் கல்வி கற்ற சிரியா நாட்டு மாணவர்களால்  அரபு தேசியம், சோசலிசம், மதச்சார்பின்மை  போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்த இயக்கம் உருவானது. 


சிரியாவில் பாத் கொள்கைகள் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அங்குள்ள கல்லூரிகளில் பயின்று கொண்டிருந்த ஈராக் மாணவர்களும் கவரப்பட்டனர். அவர்கள் ஈராக்கிலும் வேர்விட்டனர். ஈராக் தொழிலாளரை நிறுவனமயப்படுத்தினர். வேலை நிறுத்தங்களை ஒழுங்குபடுத்தி காசிமின் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாத் உறுப்பினர்களின் தாக்குதல் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தப்பிவிட்டார். அவர்தான் சதாம் ஹுசைன். இந்தச் சம்பவம் சதாமை ஹீரோ நிலைக்கு உயர்த்தியது. கட்சியின் மத்திய குழுவில் இருந்த உறவினர் ஒருவரின் உதவியால் சதாம் கட்சியில் மேல்மட்டத்திற்கு வர முடிந்தது. 1963 - ஆம் ஆண்டு, இராணுவத்திற்குள் ஊடுருவியிருந்த பாத் கட்சி ஆதரவாளர்கள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது பாத் கட்சி நாட்டின் பிரதான கட்சியாகியது. ஆனால் இராணுவ போக்கிலான ஆட்சியாளருக்கும், கட்சிக்கும் இடையில் ஒத்துப் போகவில்லை. 1968ம் ஆண்டு, மீண்டும் ஒரு சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை பாத்கட்சி முழுமையான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. 


பாத் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. தேசத்தின் தலைமை "புரட்சிகர கட்டளைப் பணியகம்” என்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் வந்தது. கட்சியின் பெயர் "அரபு பாத் சோசலிசக் கட்சி" என்று பெயர் மாற்றப்பட்டது. செயலதிபர் அஹ்மத் ஹசன் அல் பாகிர் ஜனாதிபதியாகவும், இராணுவத் தலைமை அதிகாரியாகவும் பதவியேற்றார். சதாம் ஹுசைன் RCC உப தலைவரானார். அன்றிலிருந்து ஈராக் நிலையான ஆட்சியைக் கண்டது. ஆனால் உள்வீட்டு கணக்குத் தீர்த்தல்கள் தொடர்ந்தன. பாத் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் தூக்கிலிடப்பட்டார். சில வருடங்களுக்குப் பின்னர், சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள் "தேசிய முற்போக்கு முன்னணி "என்ற பெயரில் அரசாங்கத்தில் சேர்ந்தனர். அரபு தேசியத்தை முதன் மையாகக் கொண்ட பாத் கட்சி, அரபு பேரினவாதக் கூறுகளை கொண்டிருந்தது. அது பிற சிறுபான்மை இனங்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக பார்த்தது. வடக்கே உரிமைகளை கோரி எழுச்சி பெற்ற குர்த்தியர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது. குர்தியர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். மலை சார்ந்த பகுதிகளை மறை விடமாகக் கொண்ட குர்திய கொரில்லாக்களை ஈராக் அரச படைகளால் அடக்க முடியவில்லை. பின்னர் அதுவே சதாம் அரசின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. 


பாக்தாத்தின் வடக்கே திக்ரித் என்ற சதாமின் பிறப்பிடத்தை சேர்ந் தவர்களின் ஆதிக்கம் பாத் கட்சியினுள் பெருகியது. பல முக்கிய அரசுப் பொறுப்புகள்யாவும் திக்ரித்காரர்களுக்கு சென்றன. இருந்தாலும் பிற சமூகங்களைச் சேர்ந்த விசுவாசிகளுக்கும் பதவிகள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 250 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இருந்தா லும் அவர்களிடம் அதிகாரம் இருக்கவில்லை. அனைத்து முடிவுகளும் RCC மட்டத்திலேயே எடுக்கப்பட்டன. 


சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்த பின்பு உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருந்தமை ஈராக்கிற்கு சாதகமாகப் போய் விட்டது. எண்ணெய் விற்று வந்த வருமானம், புதிய தொழிற்துறையில் முதலிடப்பட்டது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதன் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயத்தை கவனிக்க ஆளில்லாமல் போனதால், எகிப்தில் இருந்து விவசாயிகளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. பொருளாதார வளர்ச்சி காரணமாக ஈராக்தினாரின் பெறுமதிடாலரை விட அதிகமாக உயர்ந்தது. குவைத் யுத்தம் வரையில், ஈராக் உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இன்றைய நிலையுடன் ஒப்பிடும் பொழுது அதை பலரால் நம்பமுடியாது. ஈரானுடனான போர் கூட பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்த வில்லை. அதற்குக் காரணம், குவைத், சவூதி அரேபியா, மேற்குலக நாடுகளில் இருந்து வந்து குவிந்த பணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பாதுகாப்பு வழங்கின. ஈரானுடனான போரை பயன்படுத்தி ஈராக் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றும், டச்சு வர்த்தகர் ஒருவரும் இரசாயன ஆயுதங்களை விற்றார்கள். அப்போதெல்லாம் யாரும் ஆட்சேபிக்கவில்லை. நீண்ட கால போரியல் அனுபவத்தைக் கொண்ட இராணுவம், நவீன ஆயுததளவாடங்கள் என்பன ஈராக்கை பிராந்திய வல்லரசாக்கியது. பிற்காலத்தில் அதுவே செருக்குடன் குவைத் மீது படையெடுக்கத் தூண்டியது. 


ஈராக் என்ற தேசம் உருவான காலத்தில் இருந்து, குவைத் ஈராக் குக்கு சொந்தமான பிரதேசம் என்று பாக்தாத் ஆட்சியாளர்கள் உரிமை கோரி வந்தார்கள். அந்த உரிமை கோரலை அடிப்படையாகக் கொண்டு, சதாம் உத்தரவின் பேரில் ஈராக் இராணுவம் குவைத் மீது படையெடுத்தது. வளைகுடாவில் ஒரு துறைமுகத்திற்கான தேவையும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையும் பிற காரணங்கள். குவைத் படை யெடுப்பு குறித்து அமெரிக்க நண்பனுக்கு ஈராக் அறிவித்திருந்தது. அமெரிக்கா சம்மதிக்காவிட்டாலும், வாஷிங்டனில் இருந்து கிடைத்த சமிக்ஞை ஒன்றை தவறாக புரிந்து கொண்ட ஈராக் படையெடுப்பில் இறங்கியது. ஆனால் ஈராக்கை பொறியில் மாட்டி விடும் திட்டம் அது என்பது பின்னர் தெரிய வந்தது. குவைத்தை சேர்த்துக் கொண்டால் தனது வல்லரசு அந்தஸ்து உயரும் என்று ஈராக் கருதியது. அமெரிக்கா மனதில் வேறொரு திட்டம் இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து குவைத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஈராக்கை ஆக்கிரமிக்க வைத்து, போருக்குள் இழுத்து விட்டு, அமெரிக்க இராணுவ உதவியைக் காட்டி, விடுதலையான குவைத்தை தனது செல்வாக்குக்கு உட்படுத்தியது. 


சதாம் அன்று குவைத் யுத்தத்தை வரப்போகும் போர்களின் தாய் என்று வர்ணித்தார். அது எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் சொல்லப்பட்ட கூற்று என்பது பின்னர் நிரூபணமானது. குவைத் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் உடைந்தது. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த மக்கள், ஓரிரு வருடங்களில் உணவுக்கே வழியற்ற ஏழைகளானார்கள். பத்து வருடங்கள் கழித்து, மிகவும் பலவீனமடைந்த ஈராக் மீது இன்னொரு போர் திணிக்கப்பட்டது. இம்முறை சதாம் ஹுசைன் அரசைக் கவிழ்க்கும் நோக்குடன் பன்னாட்டுப் படைகள் நுழைந்தன. சதாமும், பிற முக்கியஸ்தர்களும் தூக்கிலிடப்பட்டனர். நாடு நீண்டதொரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.



Source book : ஈராக் வரலாறு
Author : கலையரசன்