நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நேற்று இரவு சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி....

26 September 2024

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நேற்று இரவு சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி.....

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட நட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் மணி 50 இவர் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் வளர்ப்பு நாயை விரட்டி வந்த சிறுத்தை வீட்டினுள் புகுந்த பொழுது எதிர்பாராத விதமாக மணியை சிறுத்தை தாக்கியதில் மணி படுகாயம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவே உடனடியாக மணியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சிறுத்தை தாக்கியதில் மணியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது சிறுத்தை தாக்கியது குறித்து கீழ் கோத்தகிரி வனத்துறையினர் மற்றும் சோலூர் மட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்