திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ராயல் ஓக் பர்னிச்சர் கடையில் செக்குரிட்டி கட்டையால் அடித்து கொலை...

26 September 2024

திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ராயல் ஓக் பர்னிச்சர் கடையில்
செக்குரிட்டி கட்டையால் அடித்து கொலை...

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காலவாக்கம் பகுதியில் உள்ள தணியாருக்கு சொந்தமான ராயல் ஓக் என்ற பர்னிச்சர் கடையில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமர் வயது 41 என்வபவர் நேற்று மாலை இந்த பர்னிச்சர் கடையில் செக்குரிட்டியாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இவருடன் சென்னை வேளச்சேரியை சேர்ந்த அசோக் என்பவர் இவருடன் இருந்தாக கூறப்படுகிறது. அதேபோல் இவர்கள் இருவரும் நேற்று  இரவு இரண்டாவது தளத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் ஆத்திரமடைந்த அசோக் அருகில் இருந்த கட்டையால் தலையில் அடித்துகொலைசெய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். பர்னிச்சர் கடை உரிமையாளர்கள் மூலமாக தகவல் அறிந்து திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மாமல்லபுரம் டிஎஸ்பிக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் டிஎஸ்பி கொலை நடந்த இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

பின்னர் கை ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடையங்களை சேகரித்து உள்ளனர்.மேலும் திருப்போரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்ப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த கொலை எதற்காக நடைபெற்றது இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தான் வேலைக்கு சேர்ந்த செக்யூரிட்டி 24 மணி நேரம் கூட தாண்டாத நிலையில் கொலை செய்யப்பட்டது திருப்போரூர் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்