அறநிலைதுறை அதிரடி நடவடிக்கை நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடம் மீட்பு

26 September 2024

அறநிலைதுறை அதிரடி நடவடிக்கை நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர்   கோவிலுக்கு சொந்தமான 
2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான இடம் மீட்பு

 
நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நவநீதஸ்வரர் சுவாமி திருக்கோயில் சொந்தமான  திருக்கோவில் பணியாளர் குடியிருப்புகளில் தனி நபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர் நாகப்பட்டினம் இணை ஆணையர் அவர்களின் நீதிமன்ற உத்தரவுகள்  நாகப்பட்டினம் துணை ஆணையர் ராணி தலைமையில்,காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியோடு கோயில் ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார்
சுமார் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட மனை மற்றும் பழங்கால ஓட்டு வீடுகள் மீட்கப்பட்டன இதன் மதிப்பு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து அனைத்து ஆக்கிரமப்புகளும் மீட்கப்படும் என தெரிவித்தனர்  50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்