மதுரை, திண்டுக்கல், தேனிக்கு ஒரே நேரத்தில் வந்த குட்நியூஸ்
11 February 2025
சென்னை: கொல்லம்-தேனி தேசிய நெடுஞ்சாலை (NH 183) மேம்பாட்டிற்கு 3,100 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதலை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் மாநில அரசு சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இப்போது இதற்கான டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.
NHAI ஆனது 700 கோடி செலவில் போடி (தேனி) முதல் உசிலம்பட்டி (மதுரை) வரையிலான 64 கிமீ கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலையை மேம்படுத்த உள்ளது. இங்கு விரிவுபடுத்தும் பணிகளை செய்து, புதிய நான்கு வழிச்சாலை அமைக்க உள்ளது இதற்கான.விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு வருகிறது.