போதைப்பொருள் வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு... கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை...
24 March 2025
கடந்த பிப்ரவரி மாதம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக மாங்கோடு கிராமம், தேங்காய் பாறை பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் ஷெமி(40) என்பவர் மீது அருமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது களியக்காவிளை மற்றும் பளுகல் காவல் நிலையத்தில் 2022 மற்றும் 2023 ம் ஆண்டில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS* அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் *திருமதி.அழகுமீனா IAS* அவர்கள் மேற்படி போதைப்பொருள் வழக்கு குற்றவாளியான அப்துல் ஷெமி(40) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்கள். உத்தரவின் பேரில் அப்துல் ஷெமி(40) என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்