அகரம்சீகூர் அருகே கிராம செவிலியர் சந்தேகம் மரணம் போலீசார் விசாரணை...

27 September 2024

அகரம்சீகூர் அருகே கிராம செவிலியர் சந்தேகம் மரணம் போலீசார் விசாரணை... 

பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கிராம செவிலியராக பணிபுரிந்து வந்தவர் சுந்தரவல்லி ( வயது 30), இவருக்கு கடந்த 7- ஆண்டுக்கு முன்பு தனது தாய் மாமன் உடன் முதல் திருமணம் நடைபெற்றது.   இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்,  அப்போது அதே கிராமத்தில் உள்ள சதீஷ்குமார் ( வயது 27) இவர் மினி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் கடந்த 5- வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்,  பெற்றோர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று  மினி பஸ்ஸில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இஞ்சினில்  பழுதுநீக்கம் செய்ய சதீஷ்குமார் பெரம்பலூருக்கு நேற்று காலை 7 மணி அளவில் சென்று விட்டார்.

இந்நிலையில் இரவு 7- மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யூனிஃபார்ம் சேலையின் மூலம் மின்விசிறியில் மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது,  இரவு 9 மணி அளவில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊசி போட வந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது சுந்தரவல்லி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள்  சுந்தரவள்ளியின் கணவர் சதீஷ்குமாருக்கும், குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் இறந்து போன சுந்தரவள்ளியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் .  தொடர்ந்து கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்