தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்

26 September 2024

தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி கோட்டை பகுதியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மையே சேவை என்ற ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் ஏற்பாட்டில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் உடைகள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் சுத்தம் செய்வது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது அதனை தொடர்ந்து தூய்மை பாரதம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கோட்டை பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணி கடைவீதி மற்றும் திருமயம் பேருந்து நிலையம் வழியாக தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றடைந்தது இந்த பேரணியில் தூய்மை பணியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பி சென்றனர்
கூடுதல் ஆட்சியர் அப்துல் ரசூல் வட்டார வளர்ச்சி சிவக்குமார் அலுவலர் வட்டாட்சியர் புவியரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன், சப் எடிட்டர்